#சென்னை | ஹெல்மட்டால் உயிர்தப்பிய இளைஞர்கள்.! பைக் மீது ஏறி நின்ற கார்.! - Seithipunal
Seithipunal



சென்னை : தரமணி அருகே பைக் மீது கார் ஏறி இறங்கிய விபத்தில், ஹெல்மட் அணிந்ததால் அதிர்ஷ்டவசமாக இரு இளைஞர்கள் உயிர் தப்பிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

தரமணி ரயில்வே நிலையம் எதிரே, அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் பைக் மீது எறியதில், பைக் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கொடூரமான விபத்தில் பைக்கில் வந்த இரு இளைஞர்களும் சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி, நல்ல குடிமகன்களாக ஹெல்மட் அணிந்து வந்ததால் உயிர் தப்பியுள்ளனர்.

இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த விக்னேஷ் மற்றும் அவரின் பின்னல் அமர்ந்து வந்த ரஞ்சித் ஆகியோர் இருவருமே ஹெல்மெட் அணிந்திருந்ததால் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். 

சம்பவ இடத்திற்கு உடனே வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் இரு இளைஞர்களும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதிவேகமாக காரை இயக்கிய ஓட்டுநர் பூபாலனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

"தலைக்கவசம் நம் உயிர்கவசம்"


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Bike accident helmet save life


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->