காவலர் குடியிருப்பில் திடீரென வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டுகள்! காவலர் படுகாயம்.!
Chengalpattu old guard quarters bomb explosion
செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரியில் உள்ள பழைய காவலர் குடியிருப்பில் திடீரென 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த வெடி விபத்தில் ஒரு காவலர் படுகாயம் அடைந்தார்.
சுமார் 20 ஆண்டுகளாக மூடி இருந்த குடியிருப்பின் பூட்டை உடைத்து சுத்தம் செய்வதற்காக சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
![](https://img.seithipunal.com/media/crime 0221.png)
மேலும் குடியிருப்பில் இருந்த 4 நாட்டு வெடிகுண்டுகளில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது.
பின்னர் அருகில் இருந்த சக காவலர்கள் படுகாயம் அடைந்த காவலரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர்.
English Summary
Chengalpattu old guard quarters bomb explosion