ECR-ல் திடீரென பற்றி எரிந்த லாரி! ஓட்டுனரின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி 500க்கும் மேற்பட்ட சிமெண்ட் மூட்டைகளை ஏற்றுக்கொண்டு கனரக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி கடலூர்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் பெரியகாட்டுபாளையம் எனும் ஊரில் சென்று கொண்டிருந்தபோது டயர் வெடித்ததில் டீசல் டேங்க் தீ பற்றியதாக தெரிய வருகிறது. 

இதனை கண்டு சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் சாலையில் ஓரத்தில் நிறுத்திவிட்டு லாரியில் இருந்து குதித்தது உயிர் தப்பியுள்ளார். இதனை அடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து முழுவதுமாக அணைத்தனர்.

இருப்பினும் லாரியின் ஒரு பகுதி எரிந்து சேதம் அடைந்தது. இந்த சம்பவம் குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீயணைப்புத் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் டீசல் டேங்க் அருகே இருக்கும் டயர் வெடித்ததில் பற்றி இருந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இருப்பினும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cement load lorry caught fire in ECR near Cuddalore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->