குன்னூர் மலை பாதையில் கோர விபத்து! 3 பேர் பலி; 30 பேர் படுகாயம்! - Seithipunal
Seithipunal


தொடர் விடுமுறையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் குடும்பத்தினருடன் மலைப்பிரதேசங்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் பெரும்பாலான சுற்றுலா தலங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் சாலை முழுவதும் நீண்ட நெடிய தூரம் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலாப் பயணிகள் கூவிய தொடங்கியுள்ளதால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து 54 சுற்றுலா பயணிகளுடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற பேருந்து குன்னூர் மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் தற்போது வரை 3 பேர் உயிரிழந்த உள்ள நிலையில் படுகாயம் அடைந்த 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சுமார் ஒன்றரை மணி நேரமாக மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bus accident on coonoor road 3 people died 30 peopl injured


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->