திருநெல்வேலி : சாலையோரத்தில் பிணமாக கிடந்த பச்சிளம் குழந்தை.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி : சாலையோரத்தில் பிணமாக கிடந்த பச்சிளம் குழந்தை.!

நேற்று திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை கழிப்பறையில் பிறந்து ஒருநாளே ஆன ஆண்குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தமிழகத்தில் அடுத்த சம்பவம் அரங்கேறி பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி அருகே அணையப்பபுரம் பகுதியில் இன்று பிறந்து சில மணிநேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டது.  இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். 

அந்த தகவலின் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீஸார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து இது முறைதவறிப் பிறந்த குழந்தை என்பதால் கொன்று வீசியிருக்கலாமா? அல்லது குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அதுமட்டுமல்லாமல், போலீசார் நாங்குநேரி சுற்றுவட்டாரத்தில் கர்ப்பிணிகளின் விவரம் குறித்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தகவல் கேட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

born baby body found in road in tirunelveli


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->