கோவையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்! - Seithipunal
Seithipunal


கோவையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை வடவள்ளியை அடுத்த சோமையம்பாளையத்தி ல், தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில்,  பள்ளி முதல்வரின் இ-மெயில் முகவரிக்கு,  உங்கள் பள்ளியின் வகுப்பறை மற்றும் கழிவறைகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக வந்திருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வடவள்ளி போலீசார் மற்றும் மாநகர போலீசார் பள்ளியில் உள்ள ஒவ்வொரு அறைகளாக சென்று வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

மேலும் பள்ளியில் உள்ள கழிப்பறைகள், மைதானம், காலியிடங்கள், ஆய்வகம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சோதனை நடத்தினர்.  பல மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் பள்ளியில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. மேலும் இது புரளி என்று கூறப்படும் நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bomb threat to private school in Coimbatore


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->