திருச்சி அருகே கிணற்றில் மிதந்த ஆண் பிணம்.! கொலையா? போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


திருச்சி அருகே கிணற்றில் மிதந்த ஆண் பிணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர்-புதுக்கோட்டை சாலை அருகே உள்ள கிணற்றில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து கே.கே நகர் போலீசார், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கிணற்றில் கிடந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தியதில் கிணற்றில் உயிரிழந்து கிடந்தவர், திருச்சி ரிவேரா நகர் பகுதியை சேர்ந்த ராகவேந்திரா (40) என்பது தெரியவந்தது. மேலும் கடந்த மூன்றாம் தேதி ஈரோடு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்ற ராகவேந்திரா, மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் மனைவி கவிதா கே.கே.நகர் போலீசில் ஏற்கனவே புகார் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராகவேந்திரா கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Body of a man floating in a well near Trichy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->