பி.ஆா்க் மாணவர் சேர்க்கை பொதுப்பிரிவு கலந்தாய்வு எப்போது தொடக்கம்.? - Seithipunal
Seithipunal


பி.ஆர்க் படிப்பிற்கான பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்குகிறது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 37 கட்டடவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கட்டட அமைப்பில் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் 1467 இடங்கள் உள்ளன. இவை ஆண்டுதோறும் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பாண்டு காண மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த மே 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 2485 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

அதில் 1400 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து தகுதியான மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கிய நிலையில் முதல் இரண்டு நாட்கள் முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுகள், விளையாட்டு வீரர் என சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்க உள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை இது குறித்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

B.Arc general councelling from tomorrow


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->