பாலத்தின் அடியில் "தொப்புள் கொடியுடன் பச்சிளங்குழந்தை" சடலம்... போலீசார் தீவிர விசாரணை...! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் முத்தாண்டிபட்டி ஆலடிக்கு ஏரிக்கரை பகுதியில் உள்ள பாலத்தின் அடியில் ரத்த காயங்களுடன் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் ஒரு பையில் பிணமாக கிடந்துள்ளது. இதைப்பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து புதுப்பட்டி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இதுகுறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பூதலூர் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தையின் உடலை வீசிச் சென்றவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Baby body with umbilical cord under the bridge in Thanjavur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->