ஏ.ஆர்.ரஹ்மான் "மறக்குமா நெஞ்சம்" இசை நிகழ்ச்சி: ரூ. 50,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு! - Seithipunal
Seithipunal


2023 செப்டம்பரில் நடந்த ஏ.ஆர். ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியை ₹10,000 டிக்கெட் வாங்கியும் காண முடியாத அர்ஜுன் என்பவருக்கு, சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ரூ. 55,000 இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது.

ஆரம்பத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி, மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் 10-ஆம் தேதி நடைபெற்றது.

ஆனால், தக்க ஏற்பாடுகள் இல்லாததால் நிகழ்விடம் பாரிய கூட்டம், போக்குவரத்து நெரிசல் ஆகியன ஏற்பட்டன. இதனால் பலர், நுழைவுச்சீட்டுடன் இருந்தும் நிகழ்ச்சியை காண முடியாமல் சென்றனர்.

அண்மையில் அளித்த தீர்ப்பில், தவறான திட்டமிடலும், ஏற்பாடுகள் சீராக இல்லாமையாலும் மன உளைச்சல் ஏற்பட்டதாகக் கூறிய அர்ஜுனுக்கு ₹50,000 இழப்பீடு மற்றும் ₹5,000 வழக்கு செலவு உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களில் இந்த தொகையை ஈவெண்ட் நிறுவனமான ஏசிடிசி ஈவெண்ட்ஸ் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AR Rahman Marakuma nenjam


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->