#BREAKING || அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காய் கிராமத்தில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் வீரையா பழனிவேல் வீடு உட்பட 3 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின் பொழுது பி.டி.ஓ அலுவலகங்களுக்கு ப்ளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அரசு ஒப்பந்ததாரர் வீரையா பழனிவேல் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் புதுக்கோட்டையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anti corruption police raid government contractor house


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->