#BREAKING || அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காய் கிராமத்தில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் வீரையா பழனிவேல் வீடு உட்பட 3 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின் பொழுது பி.டி.ஓ அலுவலகங்களுக்கு ப்ளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அரசு ஒப்பந்ததாரர் வீரையா பழனிவேல் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் புதுக்கோட்டையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anti corruption police raid government contractor house


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->