4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்.! 62 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்த புத்தேரி பகுதியை சேர்ந்தவர் மனோகர் (62). இவருடைய மனைவி சந்திரா (39). இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு மனோகர், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மனோகரை கைது செய்தனர். 

இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மனோகரனுக்கு ஆயுள் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும், மனோகர் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி சந்திரவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூபாய் 2 லட்சம் வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

An oldman who molested a 4 year old girl was sentenced to life imprisonment in chengalpattu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->