சென்னை அருகே பயங்கரம்!! அதிமுக பிரமுகர் ஓட ஓட வெட்டி படுகொலை!! - Seithipunal
Seithipunal


சென்னையின் புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான ரவியின் மனைவி கல்யாணி தற்போது அதே ஊராட்சியில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இவர்களுடைய மகன் அன்பரசு அதே  ஊராட்சியில் 9வது வார்டு உறுப்பினராகவும் இருந்து வரும் நிலையில் நேற்று நண்பர்களோடு கீழ்பாக்கம் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 4 மேற்கொண்ட கும்பல் அன்பரசுவின் காரை மறித்து 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசி உள்ளது.

இந்த சம்பவத்தில் காரில் இருந்த அன்பரசு மற்றும் அவருடைய நண்பர்கள் இறங்கி தப்பியோட முயன்ற போது அந்த கும்பல் அன்பரசுவை விரட்டிச் சென்று அறிவாலால் தலை, கால், கை என பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளது.

இதில் படுகாயம் அடைந்த அன்பரசு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காயார் போலிசார் அன்பரசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு இந்த செயலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக அதிமுக பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு வரும் சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகரான சென்னை தற்போது கொலை நகராக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK member murdered near Chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->