திருவண்ணாமலை || சட்டவிரோதமாக மரம் வெட்டிய அதிமுக பிரமுகர் கைது.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை || சட்டவிரோதமாக மரம் வெட்டிய அதிமுக பிரமுகர் கைது.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு அருகே காட்டம்முண்டி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் அன்பரசு. இவருடைய மனைவி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள வனப்பகுதியில் முள் செடிகளை அகற்றுவதற்காக ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அன்பரசு, வனப்பகுதியில் உள்ள ஏராளமான மரங்களை வெட்டி விற்பனை செய்துள்ளார். அவற்றின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும்.

இது தொடர்பாக வனத்துறையினர் அன்பரசு மீது கடந்த ஜூன் மாதம் வழக்குப்பதிவு செய்தனர். அவரிடம் பணிபுரிந்த ஜேசிபி ஆப்ரேட்டரான புண்ணியந்தல் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் என்பவரை கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை வனக்காப்பாளர் சுல்தான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அலுவலகத்தில் பணிபுரிந்த மூன்று பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், வனத்துறையினர்  தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் அன்பரசுவை சென்னையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk excuetuve arrested for trees cut in thiruvannamalai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->