அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மீது வழக்கு!
ADMK Ex minister against case
விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பதிவாளராக இருப்பவர் முத்துசாமி (வயது 55) இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் தன்னை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ''அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் கடந்த 21.2.2023 அன்று செல்போனில் தன்னை தொடர்பு கொண்டு தான் அனுப்பி வைக்கும் நபரிடம் ரூ. 10,000 கொடுத்து அனுப்புமாறு தெரிவித்தார்.
ஆனால் கட்சிகளுக்கு பணம் தருவதில்லை என்று நான் மறுத்து விட்டேன். இந்நிலையில் என்னை அவர் நேரில் சந்தித்தபோது, லஞ்ச ஒழிப்பு துறையில் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என மிரட்டினார்.
இது தொடர்பாக நான் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ மான்ராஜிடம் முறையிட்டேன். இத்தொடர்பாக விசாரிப்பதாக தெரிவித்த அவர் என்னை தொடர்பு கொண்டு இன்பத்தமிழன் லஞ்ச ஒழிப்பு துறைக்கு உன்னை பற்றி புகார் செய்துள்ளார்.
இதனால் தற்போது ரூ.10 லட்சம் கேட்பதாக தெரிவித்தார். மேலும் அதனை கொடுக்க மறுத்தால் லஞ்ச ஒழிப்பு துறையின் நடவடிக்கைக்கு நீ ஆளாக நேரிடும் என்று மிரட்டுவதாக தெரிவித்திருந்தார்'' என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் இன்பத் தமிழ் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
ADMK Ex minister against case