மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ்! தீர்ப்புக்குப்பின் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும், ஓபிஎஸ் உள்ளிட்டோரின் மனுக்கள் தள்ளுபடி செய்ததும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக என்பது உறுதியாகியுள்ளது. அதே சமயத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தீர்ப்புக்கு பின் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அதிமுகவின் வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "கடந்த வருடம் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற இந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுக்குழுவின் தீர்மானங்கள் செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம் வகையறாக்கள் தொடர்ந்த அனைத்து மனுக்களும், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய டிவிஷன் பெஞ்சால் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கு பல்வேறு கட்டங்களை தாண்டி வந்து உள்ளது. முதலில் பொதுக்குழு கூட்டக்கூடாது என்று வழக்கு தொடர்ந்தார்கள், அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதன் பிறகு பொதுக்குழுவை செல்லாது என்று கூறி உச்ச நீதிமன்றம் வரை சென்றார்கள். இந்த வழக்கில் அனைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. 

இந்த நிலையில், பொதுக்குழுவுடைய தீர்மானங்கள் செல்லாது என்ற ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து, புதிய வழக்கு ஒன்றை ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். அந்த தள்ளுபடி செய்யப்பட்ட மனுவை எதிர்த்து டிவிஷன் பெஞ்சில் ஓபிஎஸ் தரப்பு ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற வந்த நிலையில், இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் ஓபிஎஸ் வகையறாக்கள் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

இதன்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடப்பாடியார் தலைமையில் இயங்குகிறது என்பதை சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உறுதி செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் நான் ஏற்கனவே சொன்னது போல, பொதுக்குழு தான் அதிமுகவின் உயர்மட்ட அமைப்பு. அதனுடைய சட்டத்திட்ட விதிகளின் பிரிவு ஐந்தின் படி, பொதுகுழுவின் தீர்ப்பை இறுதியானது என்பதை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதனை உறுதி செய்து தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.

ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைவாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது உங்கள் கற்பனை என்று இன்பத்துறை பதிலளித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Case Judgement Inbadurai Say About OPS


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->