நடுரோட்டில் தீக்குளித்து இளைஞர்..அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


நாகர்கோவில் அருகே நடுரோட்டில் பழ வியாபாரி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அனந்தநாடார் குடியிருப்பை சேர்த்தவர் பழ வியாபாரி ஆனந்த்,28 வயதான ஆனந்த் சென்னையில் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நாகர்கோவில் ஆன சொந்த ஊருக்கு வந்த ஆனந்த் கடந்த 28ம் தேதி கோட்டார் பகுதியில் உள்ள அம்மன்குளம் தெருவுக்கு வந்துள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த ஆனந்த் திடீரென நடுரோட்டில் வைத்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அப்போது ஆனந்த தீக்குளித்து   அலறித்துடித்ததை பார்த்த 

அப்பகுதி மக்கள் ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததநிலையில்  சிகிச்சைபலனின்றி ஆனந்த் நேற்று முன் தினம் உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆனந்த் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A young man set himself on fire in the middle of the road shocking incident


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!


செய்திகள்



Seithipunal
--> -->