துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.96 லட்சம் மதிப்பிலான தங்கம்.! சிக்கிய ராமநாதபுரம் வாலிபர்..! - Seithipunal
Seithipunal


துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட ரூபாய் 96 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மதுரை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து அதிகாரிகள் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்த நசீம் என்ற வாலிபரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தினர்.

இதில் அவரது பையை சோதனை செய்ததில் பேஸ்ட் வடிவில் 1 கிலோ 565 கிராம் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த ரூபாய் 96.18 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இந்த தங்கம் கடத்தல் தொடர்பாக நசீமிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

96 lakhs worth gold seized at madurai airport


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->