#நீலகிரி || 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்.. 78 வயது முதியவர் கைது...! - Seithipunal
Seithipunal


நீலகிரியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து 78 வயது முதியவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

நீலகிரி பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமி பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஜான் லெஸ்லி என்ற 78 வயதான முதியவர் வீட்டிற்கு சமையல் பாத்திரங்கள் கொடுக்க சென்றபோது, முதியவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். இதையடுத்து சிறுமி, முதியவரிடம் இருந்து தப்பி வெளியே ஓடிவந்து இது குறித்து பாட்டியிடம் கூறியுள்ளார்.

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பாட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை கைது செய்தனர். பின்பு போலீசார் நீதிமன்றத்தில் முதியவரை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

78 year Oldman arrested for sexually harassing 13 year old girl in nilgiri


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->