விளையாடி கொண்டிருந்த ஆறு வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்..!
6 Years old student Dead Near Trichy
மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா இவருக்கும் அனிதா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர் இவரது இளைய மகள் வேத வர்ஷினி அங்குள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று பள்ளி விடுமுறை என்பதால் வர்ஷினி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார் அப்போது அங்கிருந்த மின்சார இணைப்பு வயிறு புடைக்க அமைக்கப்பட்டு இருந்த குழாயில் அவர் கை வைத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
6 Years old student Dead Near Trichy