திம்பம் மலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து - திருமண கோஷ்டியினர் 6 பேர் படுகாயம் - Seithipunal
Seithipunal


திம்பம் மலைபோதையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம் இருளூர் பகுதியில் இருந்து கோவை மாவட்டம் சரவணபட்டி பகுதியில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 13 பேர் சரக்கு வேனில் நேற்று மதியம் வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் வந்தபோது நான்காவது கொண்டை ஊசி வளைவில் திடீரென டயர் வெடித்ததால் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சரக்கு வேனில் பயணம் செய்து 6 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இரண்டு பேர் கோவையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

6 injured in van accident in dhimbham erode


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->