கடலூர் அருகே 500 கிலோ வெடிமருந்து பறிமுதல்! - Seithipunal
Seithipunal


கடலூர் அருகே உள்ள நொச்சிக்காடு பகுதியில் உரிய பாதுகாப்பு எதுவுமின்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட உரிமையாளர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர் அருகே உள்ள நொச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது சகோதரர் ரமேஷ் ஆகிய இருவரும் பட்டாசு விற்பனைக்கான உரிமத்தைப் பெற்றுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சிவகாசியில் இருந்து கொண்டு வரப்படும் பட்டாசுகளை விற்பனை செய்து வந்துள்ளனர்.

பட்டாசு விற்பனைக்கான உரிமத்தை இந்த ஆண்டு இவர்கள் புதுப்பித்துள்ளனர். இந்த நிலையில், போலீசாருக்கு இவர்கள் அந்த பகுதியிலேயே பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக புகார் வந்ததுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், நொச்சிக்காடு பகுதியில் உள்ள ராஜேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு சொந்தமான இடத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். 

இந்த சோதனையில், அவர்கள் உரிய அனுமதியின்றி வெடி மருந்துகளை பயன்படுத்தி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டட்டுள்ளதை  கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் அங்கு சுமார் 10-க்கும் மேற்பட்ட மூட்டைகளில், 500 கிலோ வெடி மருந்து இருந்ததை கண்டுபிடித்தனர். 

இதனையடுத்து, அந்த பகுதிக்கு வருவாய்த்துறையினர் வந்து வெடி மருந்துகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். குடியிருப்பு பகுதியில் உரிய பாதுகாப்பு எதுவும் இன்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட உரிமையாளர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

500 kg of explosives seized near Cuddalore


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->