திருத்துறைப்பூண்டி அருகே அரசு பேருந்து மோதி விபத்து - குழந்தை உட்பட 5 பேர் படுகாயம் - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில் குழந்தை உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம் வடுகூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மருமகள் பிருந்தா. இந்நிலையில் அண்ணாதுரை, தனது பேரக் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் குழந்தையை அழைத்துக் கொண்டு மருமகள் பிருந்தாவுடன் மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு திருத்துறைப்பூண்டிக்கு சென்றார்.

பின்பு அங்கிருந்து வடுகூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது திருத்துறைப்பூண்டி அருகே, அவ்வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் பேருந்து, அவ்வழியாகச் சென்ற மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது.

இந்த விபத்தில் குழந்தை உட்பட ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் படுகாயமடைந்த ஐந்து பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 injured in government bus collision in thiruthuraipoondi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->