சென்னை | மகனின் நண்பனான 17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை - 35 வயது பெண் கைது - Seithipunal
Seithipunal


சென்னையில் மகனின் நண்பனான 17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 35 வயது பெண்ணை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சத்யபிரியா(35). இவர் கடந்த இரண்டு மாதங்களாக தனது மகன் அடித்து துன்புறுத்துவதாக கூறி மகனின் நண்பர் வீட்டில் தங்கி இருந்தார். அப்பொழுது சத்யபிரியா அங்கு வசித்து வந்த மகனின் நண்பனான 17 வயது சிறுவனுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

இதையடுத்து வீட்டிற்கு செல்வதாக கூறிய சத்யபிரியா 17 வயது சிறுவனையும், தன்னுடன் அனுப்புமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், சத்யபிரியா சிறுவனை தன்னுடன் அனுப்புமாறு வற்புறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் சிறுவனிடம் விசாரித்துள்ளனர்.

இதில் சத்யபிரியா வீட்டில் தங்கி இருந்தபோது சிறுவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சத்யபிரியாவை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

35 year old woman arrested for sexually harassing a 17 year boy in chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->