குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு., சோகத்தில் மூழ்கிய கிராமம்..!!
3 boys drowned in puddle
குட்டையில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், சிவலிங்கபுரத்தில் வசித்து வருபவர். இவருக்கு நவீன்குமார் , கிஷோர் என்ற இருமகன்கள் உள்ளனர். சிறுவர்கள் இருவரும் தங்கள் நண்பர்களான மயில்முருகன், வசந்த் என்பர்களுடன் சேர்ந்து ஆடு மேய்க்க சென்றுள்ளனர்.
அந்த பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் செம்மண் அள்ளுவதற்காக குழி தோண்ட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த குழியில் மழைநீர் தேங்கி குட்டை போல இருந்துள்ளது.
இந்நிலையில், நவீன்குமார், மயில்முருகன் வசந்த் மூவரும் குட்டையில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மூவரும் குட்டையில் மூழ்கியுள்ளனர். இதனை கண்ட சிறுவன் கிஷோர் ஓடி சென்று தனது தந்தையிடம் கூறியுள்ளான்.
அங்குவிரைந்து வந்த கிராம மக்கள் மூன்று சிறுவர்களின் சடலத்ததையும் மீட்டனர். தகவறிந்து அங்கு வந்த காவல்துறையினர் சிறுவர்களின் உடலை பிரேதபரிசோதனைக்காக மருத்துவமைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோக்த்தை ஏற்படுத்தியுள்ளது.