#சென்னை || உள்ளாடைக்குள் மறைத்து கடத்தல்... ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல்.!
2 crore 53 lakhs worth gold seized at Chennai airport
வெளிநாடுகளில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது இலங்கையில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த இரண்டு பெண்களிடம் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரித்தனர்.
இதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் அவர்கள் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தின் பயணம் செய்த இரண்டு பெண்களிடம் சோதனை செய்ததில், அவர்கள் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்து ஒரு வாலிபர் மற்றும் சென்னையை சேர்ந்த இரண்டு பேர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நான்கு பெண்கள் உட்பட 7 பயணிகளை கைது செய்த அதிகாரிகள், அவர்களிடமிருந்து ரூபாய் 2 கோடியை 53 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 780 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த தங்கம் கடத்தல் தொடர்பாக 7 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
2 crore 53 lakhs worth gold seized at Chennai airport