மாணவர்கள் மீது ஏறி இறங்கிய லாரி... சம்பவ இடத்திலேயே பரிபோன 2 உயிர்... விழுப்புரம் அருகே பரிதாபம்..! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் லாரி ஏறி இறங்கியதில் இரண்டு கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராகுல்(19). இவரது நண்பர் மயிலாடுதுறை மாவட்டம் கிளியனூர் பகுதியை சேர்ந்த சபிக்(19). இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் சென்னை-திருச்சி சாலை இன்று காலை வாக்கா சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே சென்றபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி சொல்ல முயன்றுள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் ராகுல், சபிக் மீது லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இரண்டு பேரும் உயிரிழந்து உள்ளனர்.

இதைப் பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 college student killed in lorry collision in Villupuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->