காணும் பொங்கலில் விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்.. கதறி துடிக்கும் பெற்றோர்.!  - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் திருப்பனந்தாள் அருகில் சோழபுரம் வானம்பாடி பகுதியில் வசித்து வரும் சந்திரா அறிவழகன் தம்பதிக்கு 13 வயதில் நித்திஷ் என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் அங்கிருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், பொங்கல் விழாவை முன்னிட்டு அவர்களது ஊரில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில், நிதிஷ் ஓட்டப்பந்தயம் மற்றும் சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டான். அதன் பின் சற்று நேரத்தில் பலூன் உடைக்கின்ற போட்டி நடைபெற்றுள்ளது.

இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் நித்திஷ் திடீரென மயங்கி விழுந்துள்ளான். இதனால், பதறிப்போன அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிதிஷ் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து விட்டார். இது பற்றி சோழபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 13 வயது சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

13 Years boy Died In Kanum Pongal


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->