அதிகாலை தீ விபத்து பேரதிர்ச்சி...! ஒடிசா மருத்துவமனையில் 10 உயிரிழப்பு..! - மாநிலம் முழுவதும் பரபரப்பு!
Early Morning Fire Tragedy Shocking Incident 10 Dead Odisha Hospital
ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

இருப்பினும், இந்த கோர விபத்தில் சிகிச்சை பெற்று வந்த 10 நோயாளிகள் உயிரிழந்தனர்.மேலும், மருத்துவமனை ஊழியர்கள் 11 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி மற்றும் அமைச்சர் முகேஷ் மகாலிங் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர்.
மேலும், மீட்புப் பணிகள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான சிகிச்சை குறித்து அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டறிந்தனர்.
English Summary
Early Morning Fire Tragedy Shocking Incident 10 Dead Odisha Hospital