12 ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி..தலைமையாசிரியர்களை பாராட்டி கேடயம் வழங்கி கௌரவித்த மாவட்ட ஆட்சியர்!
100% pass in 12th grade The district collector honored the head teachers by presenting them with a trophy
திருவள்ளூரில் துணை தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களை பள்ளிக்கு சீரான வருகையை அதிகரிப்பது தொடர்பாக அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆலோசனை நடத்தினார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் துணை தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களை பள்ளிக்கு சீரான வருகையை அதிகரிப்பது தொடர்பாக அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணை தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் பள்ளிக்கு சீரான வருகையை அதிகரிக்கவும், வருகை தராத மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு அவர்களை பள்ளிக்கு வருவதற்கான ஆசிரியர்கள் பணி மேற்கொள்ள வேண்டும், மேலும், வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உதவியுடன் அவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு மாணவர்களை பள்ளிக்கு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். வருகின்ற துணைத் தேர்வுகளில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத வைப்பதற்கான பணிகள் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார். மேலும், பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பின்னர் கடந்த ஆண்டு பொது தேர்வில் 12 ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி அளித்த அரசு மேல்நிலைப்பள்ளி, சுரக்காய்பேட்டை , அரசு மேல்நிலைப்பள்ளி, சீத்த்ஞ்சேரி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர் ,அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி, தேர்வாய், அரசு பார்வை திறன் குறைய குறையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, பூவிருந்தவல்லி ஆகிய பள்ளி தலைமையாசிரியர்களை பாராட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி கௌரவித்தார்.
தொடர்ந்து, இந்த தலைமை ஆசிரியர்கள் போல் மற்ற தலைமை ஆசிரியர்களும் தங்களது பள்ளி மாணவர்களை 100% தேர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இதில் முதன்மை கல்வி அலுவலர் எம். மோகனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கல்வி) பவானி, உதவி திட்ட அலுவலர் பாலசுப்ரமணி மற்றும் தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
100% pass in 12th grade The district collector honored the head teachers by presenting them with a trophy