ஜாதிப் பெயர்களை நீக்க வேண்டும்..திராவிடர் தள அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தல்!
Caste names should be removed Dravidian organization urges the district collector
கோவை மாவட்டத்தில், கல்வி நிறுவனங்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க வேண்டும்,நீக்காத நிறுவனங்களின் அங்கீகாரத்தை இரத்து செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தக் கோரி, ஆதித்தமிழர் பேரவையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் நாளான நேற்று , ஆதித்தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் தோழர் கோவை ரவிக்குமார், தமிழ்ப்புலிகள் கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் Ilavenil Kovai, தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதைக் கழகத் தலைவர் தோழர் Tamiliniyan Nehrudass, திராவிடர் தளம் ஒருங்கிணைப்புக்குழு தோழர் நாராயணமூர்த்தி தீ நா ஆகியோர் தலைமையி்ல், கோவை மாவட்டத்தில் ஜாதிப் பெயர் கொண்ட நிறுவனங்களின் முகவரியோடு கூடிய பெயர்ப் பட்டியலையும், உயர்நீதிமன்றத் தீர்ப்பின் நகலையும் மாவட்ட ஆட்சியரிடம் திராவிடர் தளம் தோழர்கள் விண்ணப்பம் வழங்கினர்.

தமிழ்நாட்டிலுள்ள “அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் பெயர்களில் உள்ள ஜாதி, சமூக அடையாளங்களை உடனடியாக அகற்ற வேண்டும். இந்த கல்வியாண்டிலேயே (2025-26) ஜாதிப் பெயர்களை நீக்கவேண்டும். அப்படி நீக்காவிட்டால், அந்நிறுவனங்களின் அங்கீகாரம் இரத்து செய்யப்பட வேண்டும். அந்த நிறுவனங்களின் மாணவர்கள் 2026-27 வது கல்வியாண்டில் பிற பள்ளிகளுக்கு மாற்றப்பட வேண்டும்” என்பவை போன்ற சிறப்பான சில வழிகாட்டல்களை உள்ளடக்கிய, ஒரு தீர்ப்பை (W.P. Nos. 4563, 5465 & 4994 of 2025) கடந்த 16.04.2025 அன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பைச் செயல்படுத்துமாறு மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் ஆகியோர் விண்ணப்பத்தை கவனத்துடன் படித்து, துறை சார்ந்த அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.திராவிடர் தளம் ஒருங்கிணைப்பாளர் சேவூர் கு.செந்தில்குமார், திருப்பூர் பாலு, பல்லடம் கருப்புச்சாமி, கார்த்தி, தாமரை மற்றும் SFD மாணவர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.
English Summary
Caste names should be removed Dravidian organization urges the district collector