கும்பமேளா கூட்டத்தில் 50, 60 பேர் இறந்தனர்; நான் ஏதேனும் கேட்டேனா? அல்லது எதுவும் விமர்சனம் செய்தேனா..? சித்தராமையா பேட்டி..! - Seithipunal
Seithipunal


ஐ.பி .எல் போட்டியில், 18 வருடங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதன்முறையாக நேற்று பஞ்சாப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டமும் வென்றது. அதன் வெற்றியை பெங்களூரு ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் பெங்களூரு அணிக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். 

இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே இன்று நடந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர். அத்துட 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் வெற்றி பேரணி சோகத்தில் முடிந்துள்ளது.

இது தொடர்பில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசும் போது குறிப்பிட்டுள்ளதாவது: மகா கும்பமேளாவில் நிறைய பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அங்கு 50, 60 பேர் இறந்தனர். நான் ஏதேனும் கேட்டேனா? அப்போது நான் எதுவும் விமர்சனம் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடக்கின்றன. அதற்காக, இதனை அந்த சம்பவங்களுடன் இணைத்து ஒப்பிட்டு, ஆதரிக்கும் வகையில் நான் பேச போவதில்லை. ஆனால், காங்கிரஸ் விமர்சித்தது என்றால், அது வேறு வகையான விசயம். நானோ அல்லது கர்நாடக அரசோ அதனை விமர்சித்தோமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர்.சி,பி. அணியின் ரசிகர்களின் வெற்றி கொண்டாட்டத்தின்போது, சின்னசாமி ஸ்டேடியம் அருகே பெரிய சோகம் நடந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநில அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது என்றும், காயமடைந்த நபர்களுக்கு அரசு இலவச சிகிச்சை அளிக்கும் என அவர் கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

50 60 people died in the Kumbh Mela crowd Did I ask anything Or did I criticize anything Siddaramaiah asked


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->