குருத்வாரா இடத்திற்கு உரிமை கோரிய டெல்லி வக்ப் வாரியம்: தள்ளுபடி செய்துள்ள உச்ச நீதிமன்றம்..!
Supreme Court dismisses Delhi Waqf Boards claim to Gurdwara site
டில்லியில் குருத்வாரா அமைந்து உள்ள இடம் ஒன்றை வக்ப் சொத்து என உரிமை கோரி, டில்லி வக்ப் வாரியம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அத்துடன், அங்கு ஏற்கனவே குருத்வாரா செயல்படுவதால், அது அப்படியே இருக்கட்டும் எனக்கூறியுள்ளது.
டில்லியின் கிழக்குப்பகுதியில் உள்ள ஷாதாரா என்ற இடத்தில் குருத்வாரா ஒன்று செயல்படுகிறது. இந்த 8குருத்வாரா அமைந்துள்ள இடம், வக்ப் இடம் எனக்கூறி, டில்லி வக்ப் வாரியம் கடந்த 2010-ஆம் ஆண்டு டில்லி நீதிமன்றில் மனு தாக்கல் செய்தது. ஆனால், அந்த நிலம் வக்ப் சொத்து என நிரூபிக்க தவறி விட்டதாக தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டில்லி வக்ப் வாரியம் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், ' அந்த இடத்தில், மஸ்ஜித் தாகியாபாபர் ஷா என்ற மசூதி இருந்தது. பழங்காலத்தில் இருந்தே அங்கு மசூதி செயல்பட்டு வந்தது,' எனக்கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பிரதிவாதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், '' அந்த இடம் வக்ப் சொத்து கிடையாது என்றும், அதன் உரிமையாளரான முகமது ஆஷான் விற்று விட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், '' அந்த இடத்தில் 1947 முதல் குருத்வாரா செயல்பட்டு வருகிறது. வக்ப் சொத்து என்பதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், அங்கு குருத்வாரா இருப்பது இருக்கட்டும் எனவும், அங்கு வழிபாட்டு கட்டமைப்பு ஏற்கனவே அங்கு செயல்பட்டு வருகிறதாக, உங்கள் கோரிக்கையை நீங்களே விட்டுக் கொடுக்க வேண்டும் என்று குறித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Supreme Court dismisses Delhi Waqf Boards claim to Gurdwara site