போதும் போ! அவருடைய போதனைகளை கேட்டு ஆட்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை...! - தமிழிசை சௌந்தரராஜனை கடிந்த சேகர்பாபு
There is no need to listen to his teachings and rule Shekarbabu rebukes Tamilisai Soundararajan
சென்னையில் புரசைவாக்கத்திலுள்ள புகழ்பெற்ற கங்காதீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர், வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அமைச்சர் சேகர் பாபு:
அதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு தெரிவித்ததாவது,"இன்று மட்டும் 24 கோவில்களில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 3,500 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும். நெல்லையப்பர் கோவிலுக்கு 450 கிலோ எடை கொண்ட வெள்ளித்தேர் தயாராகி வருகிறது.முருகன் மாநாடு அல்ல.
சங்கிகள் நடத்தும் மாநாடு, அரசியல் மாநாடு. அதற்கும் திருக்கோவில் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் பல வேறுபாடுகள் உள்ளது. நாங்கள் அரசியல் சார்பில் நடத்தப்பட்ட மாநாடுகளில் 27 நாடுகளைச் சேர்ந்த முருகப் பக்தர்கள் பங்கேற்றனர். 2 நாள் நிகழ்ச்சி. நாங்கள் திட்டமிட்டு எந்த கூட்டத்தையும் வரவைக்கவில்லை.
திட்டமிட்டு யாரிடமும் நாங்கள் அப்போது வசூல் வேட்டை நடத்தவில்லை. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 7 முதல் 8 லட்சம் மக்கள் வந்தார்கள். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அந்நிகழ்ச்சி 7 நாட்களாக நீடிக்கப்பட்டது. ஆகவே அதையும், இதையும் ஒன்றாக்காதீர்கள்.
இது அரசியல் தேவைகளுக்காக, அரசியல் சூழல் நிலைக்காக, மதத்தால், இனத்தால் மக்களை எப்படியெல்லாம் பிளவுப்படுத்த முடியுமோ? அந்த பிளவிற்கான அந்த ஆயுதமான இந்த மாநாட்டை அவர்கள் பயன்படுத்த நினைக்கிறார்கள்.தமிழிசை சிறந்த அறிவாளி.
அவரது ஆலோசனைகளை, போதனைகளை கேட்டுத்தான் கட்சியையும், ஆட்சியையும் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படாது.300 பேருக்கு கல்வி ஊக்கத்தொகை கொடுத்துவிட்டு விளம்பரப்படுத்துகிறார். நாங்கள் இந்த கல்வியாண்டில் ஒரு மாவட்டத்தில் மட்டும் 5000 பேருக்கு கல்வி உதவித் தொகை தருகிறோம்" என்று தெரிவித்தார்.
English Summary
There is no need to listen to his teachings and rule Shekarbabu rebukes Tamilisai Soundararajan