11 பேர் உயிரிழந்த விவகாரம்: இதற்கு மேல் அரசு என்ன செய்ய வேண்டும்: கர்நாடக துணை முதலமைச்சர் கேள்வி..?
Karnataka Deputy Chief Minister asks what more the government should do in the matter of 11 deaths
பெங்களூருவில் ஆர்.சி.பி வெற்றி கொண்டாட்ட பேரணியில் 11 பேர் உயிரிழந்தனர் .குறித்த அசம்பாவிதம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தன்னால் முடிந்த அனைத்தையும் அரசு செய்து வருகிறது. இதற்கு மேல் அரசு என்ன செய்ய முடியும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதவது: 11 பேர் உயிரிழந்த உடன் நீதி விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறிய நிலையில், இதனை ஏற்றுக் கொண்டு முதலமைச்சர் சித்தராமையா உடனடியாக நீதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

இது தொடர்பில், நிதித்துறை சார்ந்த விசாரணை, நீதி விசாரணை என பல விசாரணைகள் நடக்கிறது. இதற்கு மேல் அரசு என்ன செய்ய முடியும்..? அரசு தன்னால் முடிந்த சிறந்த விஷயத்தை செய்து வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான திட்டம் தயாரிக்கப்படும் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு அணி நிர்வாகம், கர்நாடக கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்துள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதி குன்ஹா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Karnataka Deputy Chief Minister asks what more the government should do in the matter of 11 deaths