பிரணாப் முகர்ஜியை சந்தித்த பின்புதான் கடன் வாங்கினேன்: என்னை, 'மோசடிக்காரன்' என, எப்படி அழைக்க முடியும்..? விஜய் மல்லையா பேட்டி..! - Seithipunal
Seithipunal


''கிங்பிஷர் விமான நிறுவனம் வீழ்ச்சியை சந்தித்தபோது, அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தேன்,'' என, விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். 

வங்கிகளிடம் கடன் வாங்கி வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற தொழில் அதிபர் விஜய் மல்லையா. 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி, அதனை திருப்பிச் செலுத்தாமல், ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு 2016-இல் தப்பிச் சென்றார்.அவரை நாடு கடத்தும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக உள்ளதோடு, இது தொடர்பாக, பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது.

இந்நிலையில், யு டியூபர் ராஜ் ஷாமானி உடனான 'பாட் காஸ்ட்' எனப்படும், 'ஆன்லைன்' வானொலி நிகழ்ச்சியில், விஜய் மல்லையா கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

'கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனம், 2008 வரை சீராக இயங்கியதாகவும், அதன்பின் உலகளாவிய நிதி நெருக்கடி தொடங்கியதால்நிலைமை தலைகீழானது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பொருளாதார வீழ்ச்சி இந்தியாவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், பணம் நின்றுவிட்டதால், ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்தது என்று தெரிவித்துள்ளார்.

அந்த சூழலில் பொருளாதார சூழலை உணர்ந்து, கிங்பிஷர் நிறுவனத்தின் செயல்பாடுகளை குறைக்க, காங்கிரசைச் சேர்ந்த அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்ததாகவும், 'கிங்பிஷர் நிறுவனத்தின் விமானங்களை குறைக்க வேண்டும்; ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்' என, அவரிடம் கோரிக்கை வைத்ததாகவும், இந்த மந்தமான பொருளாதார சூழ்நிலையில் செயல்பட முடியாது என்றும் அவரிடம் தெரிவித்ததாகவும் நிழிச்சியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பிரணாப் முகர்ஜி தான் விமானங்களை குறைக்க வேண்டாம்; வங்கிகள் ஆதரவு வழங்கும் என, தன்னிடம் கூறியதாகவும், அதனால் தான் வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கியதாகவும், அனால், நிதி நெருக்கடியால், கிங்பிஷர் நிறுவனத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், என் கடன் தொகையும், 11.5 சதவீத வட்டியும் சேர்த்து நான் கட்ட வேண்டிய மொத்தத் தொகை 6,203 கோடி ரூபாய். ஆனால், என் சொத்துகள் வாயிலாக, 14,000 ரூபாய் கோடியை வங்கிகள் பறிமுதல் செய்துள்ளன என்று விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நான் திருடவும் இல்லை; ஓடியும் போகவில்லை. நான், இந்தியா திரும்பாததற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. என்னை, 'மோசடிக்காரன்' என, எப்படி அழைக்க முடியும்..? என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay Mallya says he took loan only after meeting Pranab Mukherjee


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->