பாரதி கண்ணன் தன் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார்! “கார்த்திக் நல்ல மனிதர்… யாரும் சொல்லாத உண்மைகள்!” – புட்டு புட்டு வைத்த ராதாரவி!
Bharathi Kannan shares his experience Karthik is a good person The truths no one tells Radha Ravi who has put a pudding in her mouth
நவரச நாயகன் கார்த்திக் குறித்து இயக்குநர் பாரதி கண்ணன் வழங்கிய பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தொடர்ந்து பலரும் கார்த்திக்கான எதிர்மறை சம்பவங்களை மட்டுமே கூறி வந்தனர். இதனால், “கார்த்திக்கிடம் நல்ல குணங்களே இல்லையா?” என ரசிகர்கள் கேள்வி எழுப்பும் சூழல் உருவாகியது. இந்தநிலையில், சீனியர் நடிகர் ராதாரவி முதல்முறையாக முன்வந்து, கார்த்திக்கின் மனிதநேயத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
ராதாரவி பேசியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.“பாரதி கண்ணன் தன் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார், ஆனால் அது ஏன் இப்போது?” என்று தொடங்கிய ராதாரவி, கார்த்திக்கின் பெருந்தன்மையை நினைவு கூர்ந்தார்.
“கார்த்திக் மிக நல்ல மனிதர்” என வலியுறுத்திய ராதாரவி, ஒரு முக்கிய அனுபவத்தை பகிர்ந்தார்:இந்நாட்டு மன்னர்கள் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது,ராதாரவிக்கு ‘இது நம்ம பூமி’ படம் ரிலீஸ் செய்ய இரண்டரை லட்சம் தேவைப்பட்டது.இதை அவர் நேரடியாக கார்த்திக்கிடம் கூட சொல்லவில்லை.
ஆனால் செய்தி கார்த்திக்கின் காதுகளுக்கு சென்றவுடன்,உடனே அவர் தனது மேனேஜரிடம் அந்த இரண்டரை லட்சத்தையும் அனுப்பிவைத்தார்!இதில் அதிர்ச்சி அடைந்த ராதாரவி நன்றி சொல்லக் கூப்பிட்டபோதும்,கார்த்திக்,“ஏன் பார்ட்னர் நன்றி எல்லாம்?” என்று சொல்லிவிட்டதாக ராதாரவி தெரிவித்தார்.
அது மட்டும் அல்ல—அந்தப் படத்தின் கோயம்புத்தூர் வெளியீட்டு உரிமையையும் கார்த்திக் வாங்கி உதவி செய்துள்ளார்.
ராதாரவியின் வார்த்தைகளில்,“கார்த்திக்கிடம் ஏராளமான நல்ல குணங்கள் இருக்கின்றன… அவற்றை யாரும் பேசவில்லை”
என்ற வருத்தமும் தெளிவாகப் பதிவானது.
பாரதி கண்ணன் பேட்டியைத் தொடர்ந்து ஒரே கோணத்தில் விமர்சனங்கள் வெளியாகிய நிலையில்,ராதாரவியின் இந்த உரையாடல் கார்த்திக்கான பொது விவாதத்துக்கு புதிய சமநிலையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Bharathi Kannan shares his experience Karthik is a good person The truths no one tells Radha Ravi who has put a pudding in her mouth