கலர் கலரான பொட்டு, கயிறு, அரிவாள், கத்திக்கு தடை! நெல்லை பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்! - Seithipunal
Seithipunal


நெல்லை பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்!

1. மாணவர்கள் அனைவரும் அரசால் தெரிவிக்கப்பட்ட வண்ணச் சீருடையையே அணிந்து வர வேண்டும். மேலும் ஆண் மாணவர்கள் முக்கால் அளவுள்ள கால் சட்டை, இறுக்கமான கால்சட்டை அணிந்து வரக்கூடாது. அரைக்கை சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும். சட்டை மிகவும் இறுக்கமாக இருக்க கூடாது. மேலும் கைப்பகுதி முழங்கை அளவுக்கு சற்று மேல் இருக்குமாறு அமைய வேண்டும்.

2. தலைமுடி ஸ்மார்ட் கட்டிங் செய்து வரவேண்டும். தலையை சுற்றி அதிக முடி வைத்து மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது. அதிக முடி வைத்து மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது.

3. கலர் கலரான பொட்டு வைத்து வருவது வண்ணக் கயிறுகள் கையில் கட்டுவது, கழுத்தில் அணிவது கூடாது.

4. சாதி அடையாளங்களை குறிக்கும் வகையில் உள்ளாடை பனியன் அணிந்து வருவதையும், சைக்கிள்களில் சாதி அடையாளங்களுடன் Sticker ஒட்டி வருவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.

5. ஆபத்தை உண்டாக்க கூடிய பொருட்கள் (அரிவாள், கத்தி கூர்மையான பொருட்கள், சைக்கிள் Chain) போன்றவை மாணவர்கள் கொண்டு வருகிறார்கள் என்பதை தினமும், பள்ளி நுழைவாயிலில் மாணவர்களின் புத்தகப் பையை சோதனை செய்ய வேண்டும்.

6. பெண் மாணவிகள் நிறைய பொட்டு வைத்து வருவதை தவிர்க்க வேண்டும். கலர் ரிப்பன் கட்டி வருவதை தவிர்க்கவேண்டும்.

7. இரட்டை சடை முறையாக பின்னல் செய்து Over Coat அணிந்து பள்ளிக்கு வரவேண்டும்.

8. நல்ல தூய்மையான காலணிகளை பயன்படுத்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

9. தன் சுத்தம் பேன 10- கட்டளைகளை தினமும் வழிபாட்டுக் கூட்டத்தில் எல்லோரும் சொல்ல வேண்டும். அதனை மாணவர்கள் கடைப்பிடிக்கிறார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

10. Napkin பயன்படுத்துதல், கழிவறையை பயன்படுத்துதல் முறை பற்றி ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

11. சாப்பிடுவதற்குமுன், பின் கழிவறையை பயன்படுத்திய பின் கைகளை சுத்தம் செய்வது பற்றி தெரியப்படுத்த வேண்டும்.

12. மாணவர்களிடையே மோதல் ஏற்படா வண்ணம் முன் கூட்டியே அறிந்து அதனை தடுத்து நிறுத்திட தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் நடடிவக்கை மேற்கொள்ள வேண்டும்.

13. ஒவ்வொரு தேர்வுக்குப் பிறகும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் சந்தித்து மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் பிற செயல்பாடுகள் குறித்து தினமும் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு விடுப்பு தேவை எனில் பெற்றோர் வகுப்பாசிரியருக்கு தகவல் தெரிவித்து விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். தகவலின்றி மாணவர் பள்ளிக்கு விடுப்பு எடுத்தால் மறுநாள் பெற்றோர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் உரிய காரணம் தெரிவிக்க வேண்டும்.

14. மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கவும், அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையவும், பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nellai school student


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->