இதெல்லாம் ஒரு ஆதாரமா? திமுக ஐடி விங்க் கொத்தடிமைகளா? செக்கில் ஆட்டிய சுத்தமான உருட்டு! அதிமுக vs திமுக கடும் விவாதம்! - Seithipunal
Seithipunal


ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் பரத்குமார் என்பவரிடம் ரூ. 2.11 கோடி ஏமாற்றியதாக புகாரில், அதிமுகவை சேர்ந்தவரும், நடிகருமான அஜய் வாண்டையார் மீது நுங்கம்பாக்கம் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியை சுட்டி கட்டி திமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அடிமை அதிமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணியா? இல்லை, பொதுமக்களின் வாழ்க்கையில் விளையாடும் அணியா?

அதிமுக தனது அடிமைகளை ஏவி விட்டு மதுபோதையில், வன்முறையில் ஈடுபடச் செய்வது, பண மோசடி செய்வது என தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவது, பின்னர் அவர்களே வந்து சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பி முதலைக் கண்ணீர் வடிப்பது என கபட நாடகங்கள் தொடர்கின்றன. A1 கைதி எண்.7402 வளர்த்த அடிமைகளல்லவா? இத்தகைய குற்றங்களை செய்யாவிட்டால் தான் ஆச்சர்யம்" என்று தெரிவித்துள்ளது.

இதற்க்கு பதிலளித்துள்ள அதிமுக ஐடி விங்க், "அஇஅதிமுக-வில் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி துவங்கப்பட்டு, மாவட்ட வாரியாக விளையாட்டிற் சிறந்த இளைஞர்கள் கண்டறிந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனரே தவிர, இன்னும் நிர்வாகிகள் யாரும் நியமிக்கப்படவில்லை.

இவ்வளவு தான் உங்க Intelligence- ஆ?

ஒரு Verifcation கூட ஒழுங்கா பண்ண மாட்டீங்களா திமுக ஐடி விங்க் கொத்தடிமைகளா?

ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை சட்டம் ஒழுங்கை சீர்கெடுத்தது திமுக உபிஸ் தானே?

திமுக காரனைக் கண்டால் மக்களே பயந்து ஓடும் அளவிற்கு சட்டம் ஒழுங்கும், போதைப்பொருள் புழக்கமும் இருக்க, அதைக் காக்க வேண்டிய திமுகவோ தெய்வச்செயல் முதல் ஜாபர் சாதிக் வரை அடைக்கலம் கொடுக்கும் கட்சியாக இருக்க, அதைப் பற்றி பேச வக்கில்லாமல் எதிர்க்கட்சி சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதாக இஷ்டத்துக்கு அளந்து விடுவது....

"Father Of Corruption" கருணாநிதியும், "பழமொழிச் செம்மல்" ஸ்டாலினும் வளர்த்த கொத்தடிமைகள் தானே இவர்கள்? பொய்யும், உளறலும் இல்லாமல் இருந்தால் மட்டும் தான் ஆச்சரியம்" என்று தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள திமுக ஐடி விங்க், "இதோ பேனரில் உங்கள் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் பக்கத்திலேயே பல் இளித்துக் கொண்டு இருக்கிறாரே, இவர் தான் மதுபோதையில் வன்முறையில் ஈடுபடுவது, பண மோசடி, கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றை முழுநேர தொழிலாக செய்து வரும் அ.இ.அ.தி.மு.க.வின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியைச் சார்ந்த அஜய் வாண்டையார்.

இது போதுமா‌? இல்லை உங்கள் அணிச் செயலாளருக்கும் அடிமை எடப்பாடிக்கும் இவர் செய்த அந்தரங்க உதவியை எல்லாம் சேர்க்க வேண்டுமா?

தன் அணிச் செயலாளர் யாரோடு இருக்கிறார் என்பது கூட தெரியாதா? அது சரி டயருக்கு வணக்கம் வைத்து பழகியதால் காருக்கு உள்ளே யார் இருக்கிறார்கள் என்று எப்படி தெரியும் அதிமுக ஐடி விங்க் அடிமைகளுக்கு?

அ.இ.அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கருக்கலைப்பு புகழ் மணிகண்டன் போன்றோரின் செயல் எல்லாம் பேச நா கூசும். அந்த அளவிற்கு பல வரலாறுகளை வைத்துள்ள அடிமைகள் தானே நீங்கள்!

ஊழல் ராணி A1 கைதி எண் 7402 வளர்த்த டயர் நக்கி அடிமைகளே, பொள்ளாச்சி வழக்கு முதல் அண்ணாநகர் சம்பவம் வரை  அ.இ.அ.தி.மு.க.காரன் என்றாலே மக்கள் அலறியடித்து ஓடும் அளவிற்கு கட்சியை நடத்திவரும் உங்களுக்கு எங்களைப்பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. எங்களுக்கும் எந்த Levelக்கும் இறங்கத் தெரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று தெரிவித்தது.

இதற்கு அதிமுக ஐடி விங்க், "இதெல்லாம் ஒரு ஆதாரம் ன்னு தூக்கிட்டு வரும் அளவுக்கு தான் இருக்கீங்களா DMKITwing கொத்தடிமைகளே?

எங்கள் Stand எப்போதும் ஒன்று தான்- எங்கள் கட்சியில் இருப்பவர்கள் தவறு செய்தால், அவர்களை உறுதியாக கட்சி நீக்கம் செய்துவிடும்.

நாலு போட்டோ, ரெண்டு போஸ்டர் வைத்துக்கொண்டு இவருடன் அவர், அவருடன் இவர் என்று கதை எழுதலாம் என்றால், துபாய் சென்ற ஸ்டாலினுடன் கோட் போட்ட புகைப்படத்தைப் போட்டு நாங்களும் "அந்தரங்க உதவி" என கேள்வி கேட்டு எழுத முடியும்!

ஆனால், உங்க அளவுக்கு CHEAP-ஆக அரசியல் செய்பவர்கள் நாங்கள் அல்ல.

உங்களைப் போன்று ஞானசேகரன் அனுதாபி என்று சொல்வது, தெய்வச்செயலுக்கு அரணாக இருப்பது, சர்வதேச Drug Mafia தலைவன் ஜாபர் சாதிக்கிற்கு அரசியல் அடைக்கலம் கொடுப்பதெல்லாம் எங்கள் வழக்கமல்ல.

பொள்ளாச்சி வழக்கில் நாங்கள் யாரைக் காப்பற்றினோம்? அண்ணா நகர் வழக்கில் யாரைக் காப்பாற்றினோம்? பொள்ளாச்சி வழக்கில் தண்டனை கிடைத்ததற்கு காரணம் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிட்ட CBI விசாரணை.

தி.மு.க. அமைச்சர் பெரியகருப்பன் போன்றோரின் செயல் எல்லாம் பேச நா கூசும். அந்த அளவிற்கு பல வரலாறுகளை வைத்துள்ள கொத்தடிமைகள் தானே நீங்கள்?!

குற்றவாளிகளைக் காக்கும் கூடாரமான திமுகவிற்கு எங்களை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.

ஆபாசம், பச்சைப்பொய், அவதூறு என நீங்க எந்த கீழ்த்தரமான Level-க்கும் இறங்கக் கூடிய கட்சி தான் என்பதால், உங்களின் செக்கில் ஆட்டிய சுத்தமான உருட்டுகளை நாங்களும், தமிழ்நாட்டு மக்களும் ஒருபோதும் கண்டுகொள்ளப் போவது இல்லை" என்று தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK DMK IT Wing


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->