மோதலால் வந்த வினை.. கடுமையான தண்ணீர் பஞ்சத்தை நோக்கி செல்லும் பாகிஸ்தான்! - Seithipunal
Seithipunal


சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தானில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 காஸ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தான் கடுமையான சிரமங்களை சந்தித்து வருகிறது. 

சமீபத்தில் பாகிஸ்தான் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவலின் படி , ஜூன் 2, 2024 உடன் ஒப்பிடும்போது, ஜூன் 2, 2025 நிலவரப்படி, சிந்து நதி நீர் அமைப்பில் கிடைக்கும் நீரின் சதவீதம் 10.3 சதவீதம் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது.மேலும் அங்கு தென்மேற்கு பருவமழை வருவதற்கு இன்னும் நான்கு வாரங்கள் இருப்பதால், வரும் நாட்களில் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்படுகிறது.

இந்தநிலையில் சிந்து நதி நீர் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் சிந்து நதி அமைப்பு ஆணையம்  இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி நிலவரப்படி 1,28,800 கனஅடி தண்ணீர் கிடைத்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை   விட 14,888 கனஅடி குறைவாக இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது பாகிஸ்தான்.

இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு தற்போது நடைபெற்று வரும் காரீப் பயிர் விதைப்பு பருவம், தென்மேற்கு பருவமழை ஜூலை இறுதி வரை பஞ்சாப் மாகாணத்தை அடைய வாய்ப்பில்லை எனவே  விவசாயத் துறை கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் ஆணையம் கூறியுள்ளது.

இரண்டு முக்கிய அணைகளில் சுமார் 50 சதவீத நீர் இருப்பு பற்றாக்குறையையும் எதிர்கொள்வதாக பாகிஸ்தான் கடந்த மாதம் கூறியது. இந்தநிலையில் அணை அதிகாரிகள் மற்றும் நீர்ப்பாசன விநியோக கண்காணிப்பு நிறுவனங்கள் நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீரை நியாயமான முறையில் பயன்படுத்துமாறு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The result of conflict Pakistan heading towards a severe water crisis


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!


செய்திகள்



Seithipunal
--> -->