ஆன்லைன் விளையாட்டில் ரூ.5 லட்சம் இழந்த தம்பதி தற்கொலை!
A couple who lost Rs 5 lakh in online gambling committed suicide
ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட கடன் பிரச்சனையால் இளம் தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராஜஸ்தானின் கோட்டா நகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் கோட்டா நகரில் வசித்து வந்த தீபக் ரத்தோர் மற்றும் ராஜேஷ் ரத்தோர் தம்பதிக்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு 5 வயதில் மகள் இருக்கிறாள். கணவன் தீபக்கிற்கு மொபைல் போனில் ஆன்லைன் வழியேயான விளையாட்டில் ஈடுபடும் பழக்கம் வழக்கம் இருந்துள்ளது.
இந்த ஆன்லைன் வழியேயான விளையாட்டில் அவருக்கு ரூ.5 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது . இந்நிலையில், ரூ.5 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டதை தன்னுடைய மூத்த சகோதரியிடம், சாவதை தவிர வேறு வழியில்லை என கூறி அழுதுள்ளார்.
அப்போது, தன்னுடைய மூத்த சகோதரி பணம் ஏற்பாடு செய்து தருகிறேன். கடனை அடைத்து விடலாம் என அவர் உறுதி கூறியுள்ளார் . ஆனால், தீபக் மற்றும் அவருடைய மனைவி இருவரும் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளனர்.அப்போது இந்த தம்பதியின் மகள் வந்து கதவை திறந்துபார்த்தபோது, அவர்கள் 2 பேரும் தற்கொலை செய்து இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
இதுபற்றி கோட்டா நகர காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைத்து வந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.இதையடுத்து நடந்த போலீஸ் விசாரணையில் ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட கடனே இந்த தம்பதியின் தற்கொலைக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்கின்றனர்.
English Summary
A couple who lost Rs 5 lakh in online gambling committed suicide