என்னவா இருக்கும்! ஜி 7 மாநாட்டை பிரதமர் மோடி புறக்கணிக்க காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டு வருகிற 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை கனடாவிலுள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தில்   ஜி7 ( G 7 ) உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் மேற்குஆசியாவின் நிலைமை மற்றும் ரஷ்யா-உக்ரைன் நாடுகள் தாக்குதல் உள்ளிட்ட உலகம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து ஆலோசனை நடக்க இருக்கிறது.

இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு இன்னும் அழைப்பு வரவில்லை. இதன் காரணமாக, பிரதமர் மோடி ஜி7 உச்சி மாநாட்டை புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டில் காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான உறவு மோசம் அடைந்துள்ளது.

இதனால் பிரதமர் மோடி ஜி7 மாநாட்டை இந்த ஆண்டு புறக்கணிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.மேலும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுத்த பிறகு, முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தலைமையில் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைந்த முதலாம் ஆண்டு நிறைவு குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

reason for Prime Minister Modi to boycott G7 summit


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!


செய்திகள்



Seithipunal
--> -->