மதுராந்தகம் அருகே சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து - 10 பேர் காயம் - Seithipunal
Seithipunal


மதுராந்தகம் அருகே சொகுசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தென்காசியில் இருந்து சுமார் 30 பயணிகளுடன் சென்னை நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்பொழுது செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து போலீசார் விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10 injured in bus overturns near Maduranthakam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->