சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா 3வது ஒருநாள் போட்டி.. சென்னை வந்தடைந்தார் விராட் கோலி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில், முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது.

 இதன் மூலம் 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் 2 போட்டிகளின் முடிவில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து தொடரை நிர்ணயிக்கும் 3வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள்  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் 3வது ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் வீரர்கள் சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் இந்திய நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி இன்று சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் விராட் கோஹ்லிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

நாளை மறுநாள் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால், இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Virat Kohli arrived Chennai for ND vs AUS 3rd ODI match


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->