கையிலிருந்த வெற்றியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தாரைவார்த்த பஞ்சாப் அணி.!!
rajasthan royals win
14-வது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்ச முடிவு செய்தார்.
அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய எவின் லீவிஸ் 21 பந்திற்கு 36 ரன்களை எடுத்தார். யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி அரைசதம் எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 49 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார், லியாம் லிவிங்ஸ்டோன் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மஹிபால் லாம்லோர் 17 பந்துகளில் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 20 ஓவர் முடிவில் 185 ரன்கள் எடுத்துள்ளது. 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல், மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடினார். இந்த இரண்டு ஜோடிகளும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சை நான்குபுறமும் சிதறடித்தனர். கே எல் ராகுல் 49 ரன்களும், மாயன்க் அகர்வால் 67 ரன்களும் எடுத்து வெளியேறினார்.
வெற்றிக்கு தேவையான 60 சதவீத ரன்களை துவக்க வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் எடுத்துவிட்டதால், பஞ்சாப் அணியை ஈசியாக இந்த போட்டியில் வெற்றிபெறும் என கருதப்பட்டது. இதையடுத்து நிக்கோலஸ் பூரணும் சிறப்பாக விளையாடினர். இதன்மூலம் கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அசத்தலாக விளையாடிய பஞ்சாப் அணியால் 6 பந்துகளில் 4 ரன்கள் எடுக்க முடியாதா என்று அனைவரும் நினைத்து நிலையில், கடைசி வரை கார்த்திக் தியாகி வீசி வெறும் 2 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து, 2 விக்கெட்டுகளை எடுத்து, பஞ்சாப் அணியை தோல்வியில் தள்ளினார். இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.