பாரா ஒலிம்பிக் : வெண்கலம் வென்ற நித்யஸ்ரீக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


xபாரா ஒலிம்பிக் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்ற நித்யா ஸ்ரீ சிவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் .

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்  உலகம் முழுவதிழும்  இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள நிலையில், இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி பதங்கங்களை குவித்து வருகிறது.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டி இன்று நடைபெற்றது. இந்த பேட்மிண்டன் போட்டியில் நித்யஸ்ரீ சிவன் வெண்கலப்பதக்கம் வென்றுள்ள நிலையில், அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் SH6 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யா ஸ்ரீ சிவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்றும், நித்யஸ்ரீ சிவனின் திறமை மற்றும் கடின உழைப்பு எங்கள் அனைவரையும் பெருமைப்படுத்தி உள்ளது என்று  பாராட்டியுள்ளார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Para Olympics Chief Minister M K Stalin congratulates Nityasree who won bronze


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->