போர் பதற்றம் எதிரொலி: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைப்பு!
IPL 2025 Operation Sindoor India Pakistan
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் பங்கேற்று, போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
ஆனால், இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான நிலைமையின் காரணமாக, ஐ.பி.எல். தொடரை ஒத்திவைக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை நெருக்கடியாக உள்ளதால், போட்டிகளில் பங்கேற்றுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள், அவரவர் நாடுகளுக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, போட்டிகளை தற்காலிகமாக நிறுத்தும் முடிவை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே, தரம்ஷாலாவில் நடைபெறவிருந்த பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கிடையேயான போட்டி பாதுகாப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளின் வீரர்களையும் பாதுகாப்புடன் டெல்லிக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய தேதி மற்றும் போட்டி அட்டவணை குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
English Summary
IPL 2025 Operation Sindoor India Pakistan