ஆசிய விளையாட்டு போட்டியில் முதல் பதக்கத்தை வென்ற இந்தியா.!
india won silvar at asian games in china
ஆசிய விளையாட்டு போட்டியில் முதல் பதக்கத்தை வென்ற இந்தியா.!
சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று ஆரம்பமானது. இந்த விழாவில், சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொண்டு ஆசிய போட்டிகளை தொடங்கி வைத்தார்.

அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகள் அனைத்தும் ஹாங்சோவில் அமைக்கப்பட்டுள்ள 56 அரங்கங்கள் மற்றும் மைதானங்களில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா உள்ளிட்ட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
அதில், இந்தியா சார்பில் 655 வீரர்கள் வீராங்கனைகள் 40 வகை போட்டிகளில் 482 பிரிவுகளில் பங்கேற்கின்றனர். 40 வகையான விளையாட்டுக்களுடன் 61 பிரிவுகளில் நடைபெறும் இந்தப் போட்டியில் கால்பந்து, கிரிக்கெட், படகு பந்தயம் உள்ளிட்ட போட்டிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகளுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் ரமிதா, அஷி சோக்ஸி, மெகுலி ஜோடி 1886 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றது
இதேபோல், இன்று நடைபெற்ற படகுப் போட்டிக்கான இறுதி போட்டியில் அர்ஜூன் லால், அர்விந்த் சிங் ஜோடி வெள்ளி வென்றது. ஆசிய போட்டியில் இந்தியா தங்களுடைய முதல் பதக்கத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
india won silvar at asian games in china