ஆடி பௌர்ணமி என்ன செய்ய வேண்டும்.! தயாராகும் பெண்கள்.!
aadi pournami special
ஆடி மாதத்தில் வருகிற பௌர்ணமி ரொம்பவே விசேஷம். மாதந்தோறும் வருகிற பௌர்ணமியில் கோவிலுக்குச் சென்று, வழிபடுவதும் விசேஷம்.ஆடி மாத பௌர்ணமியான நாளைய தினம் (15.08.2019) அம்மன் கோவில்களில் விசேஷ பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும்.
ஆடி மாத பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டுக்கு மட்டுமின்றி அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும்.
பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது. அன்னை தேவி பராசக்தியை, இந்த ஒளிமயமான பௌர்ணமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்யும்போது அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கும்.

பௌர்ணமி அன்று கோவில்களிலும், வீட்டிலும் விளக்கேற்றி வழிபடுவதால் நிறைய நற்பலன்களை அடைய முடியும்.
அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்து, புடவை சார்த்தி, பொங்கல் படையலிட்டு வழிபட்டால் குடும்பத்தில் வளம் பெருகும். நிம்மதி குடிகொள்ளும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்.
அதேபோல், ஞானக் கடவுளாம் ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பௌர்ணமி என்கிறது புராணம். எனவே ஆடி பௌர்ணமி நாளில், ஸ்ரீஹயக்ரீவரரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும்; குழந்தைகள் கல்வியில் ஜொலிப்பார்கள். கல்வியும், ஞானமும் கிடைத்து சகல ஐஸ்வர்யங்களுடனும் வாழலாம்...!
ஆடி பௌர்ணமியின் சிறப்பு :
நாளைய தினம் பெண்கள், அம்மன் கோவில்களில் காலையும், மாலையும் விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் நிம்மதி தவழும். தரித்திரம் விலகும் என்பது ஐதீகம்.