#BigBreaking : 'லிவிங் டுகெதர்'., ஜோசப் பேபி - கலைச்செல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
chennai hc order to living together case
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள் குடும்பநல நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதற்கு சட்டப்பூர்வமாக எந்த உரிமையும் இல்லை என்று, சென்னை உயர்நீதிமன்றம் சற்று முன்பு ஆணை பிறப்பித்துள்ளது.
வெளிநாடுகளில் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆணும், பெண்ணும் ஒன்றாக இணைந்து குடும்பம் நடத்திவிட்டு, பின்னர் திருமணம் செய்து கொள்வதும் அல்லது சுமுகமாக அவர்களுக்குள் பிரிந்து செல்வதை 'லிவிங் டுகெதர்' என்ற பெயரில் ஒரு வாழ்க்கை முறையாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அதாவது., திருமணம் ஆகாத ஒரு ஆணும், திருமணம் ஆகாத ஒரு பெண்ணும் கணவன்-மனைவி போல் ஒன்றாக அனைத்திலும் சேர்ந்து, ஒரே வீட்டில் வாழ்வார்கள். பின்னர் அவர்களுக்குள் எப்போது வேண்டுமானாலும், பிரிந்துகொள்ளலாம். என்னை விட்டுப் பிரியக் கூடாது என்று அந்த ஆணோ., பெண்ணோ உரிமை கோர முடியாது. இதுதான் இந்த லிவிங் டுகெதர் என்ற வாழ்க்கை முறையாகும்.
இந்த முறை தற்போது இந்தியாவிலும் ஆங்காங்கே தோன்றி வருகிறது. இதற்கு பலரும் தங்களுடைய கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கலைச்செல்வி என்பவர் ஜோசப் பேபி என்பவருடன் லிவிங் டுகெதர் வாழ்ந்து வந்ததாகவும், இந்த வழக்கை குடும்ப நல நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்ததாகவும், எனவே ஜோசப் பேபி உடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்றும் முறையிட்டு இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள் குடும்பநல நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதற்கு சட்டப்பூர்வமாக எந்த உரிமையும் இல்லை என்று, சற்று முன் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் பணப்பரிவர்த்தனை தொர்பாக முன்விரோம் காரணமாகவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி அவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
English Summary
chennai hc order to living together case